/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
48.57 சதவீதம் பேர் எழுதிய குடிமைப்பணித்தேர்வு
/
48.57 சதவீதம் பேர் எழுதிய குடிமைப்பணித்தேர்வு
ADDED : ஆக 17, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான குடிமைப்பணிகள் தேர்வை, கோவையில், 48.57 சதவீதம் பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான குடிமைப்பணிகள் தேர்வை, நேற்று நடத்தியது. கோவை மாவட்டத்தில், 19 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும், அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத, 4,836 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,349 பேர்(48.57 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர்.