/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை
/
கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை
ADDED : ஆக 28, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:அடையாளம் தெரியாத நபரை, கல்லால் தாக்கிக் கொன்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, பேரூர் போலீஸ் சோதனை சாவடி அருகே நொய்யல் ஆறு வாய்க்கால் பகுதியில், ஓர் ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.
இறந்து கிடந்தவருக்கு, 50 வயது இருக்கலாம்; அவரின் தலையில், கல்லை துாக்கி போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளார்.
அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. பிச்சை எடுப்பவராக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' காட்சி அடிப்படையில், சிலரை விசாரிக்கின்றனர்.