/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை
/
தனியார் துறைகளில் 51 பேருக்கு வேலை
ADDED : டிச 11, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
: திருப்பூரில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 51 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக, நான்காவது தளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார்.
ஆடை உற்பத்தி, நகை கடை உள்பட 27 நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான அலுவலர்களை, நேர்காணல் வாயிலாக தேர்வு செய்தனர்.
முகாமில், 55 ஆண்கள்; 59 பெண்கள் என, மொத்தம் 114 வேலை தேடுவோர் பங்கேற்றனர். 25 ஆண்கள்; 26 பெண்கள் என, மொத்தம் 51 பேர், தேர்வு செய்யப்பட்டனர்.
- நமது நிருபர் -

