sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை:  பொங்கல் முடிந்த பின் புது வரத்து  

/

 இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை:  பொங்கல் முடிந்த பின் புது வரத்து  

 இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை:  பொங்கல் முடிந்த பின் புது வரத்து  

 இயல்புக்கு வந்தது சீரக சம்பா விலை:  பொங்கல் முடிந்த பின் புது வரத்து  


ADDED : டிச 10, 2025 09:39 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சீரக சம்பா விலை, கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்டிருந்த நிலையில், தற்போது இயல்பு விலைக்கு திரும்பியுள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை சந்தைக்கு அரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும்.

மேற்கு வங்கத்தில் அதிக மழை பொழிவு காரணமாக, கடந்த ஆக., முதல் சீரகசம்பா அரிசி விலை உயர்ந்து, 220 ரூபாய் வரை விற்பனையானது. புதிய பயிர் வரத்துக்கள் பிப்., மாதம் முதல் துவங்கும் என்பதால், பழைய இருப்புகள் அனைத்தும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால், கோவை சந்தையில சீரக சம்பா அரிசி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், விலை 120 ரூபாய் வரை விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணக்குமார் கூறுகையில், '' புதிய பயிர் வரத்துக்கள் பொங்கல் முடிந்து, ஜன., இறுதி-பிப்., முதல் வாரத்தில் துவங்கிவிடும். அரிசியின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பெரிய அளவில் வரத்து உள்ளதால், விலை உயர்வு இல்லை. சீரக சம்பா விலை குறைந்து நேற்று, 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இட்லி அரிசி 41 ரூபாய்க்கும், சப்பாட்டு அரிசி 47 முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது, '' என்றார்.

25 கிலோவுக்கு கீழ் 5 சதவீத ஜி.எஸ்.டி.,

அரிசியை பொறுத்தவரையில், 25 கிலோவுக்கு மேல் எடுத்தால் ஜி.எஸ்.டி., இல்லை. அதற்கு கீழ் எடுத்தால், 5 சதவீத வரி கூடுதலாக மக்கள் செலுத்தவேண்டி உள்ளது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அரிசிக்கு ஜி.எஸ்.டி., விலக்கு முற்றிலும் அளிக்கவேண்டும் என, வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us