sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பள்ளி மாணவர்களுக்கு 'பாட்டரி டெஸ்ட்' வரும் 31ம் தேதிக்கு முடிக்க அறிவுறுத்தல்

/

 பள்ளி மாணவர்களுக்கு 'பாட்டரி டெஸ்ட்' வரும் 31ம் தேதிக்கு முடிக்க அறிவுறுத்தல்

 பள்ளி மாணவர்களுக்கு 'பாட்டரி டெஸ்ட்' வரும் 31ம் தேதிக்கு முடிக்க அறிவுறுத்தல்

 பள்ளி மாணவர்களுக்கு 'பாட்டரி டெஸ்ட்' வரும் 31ம் தேதிக்கு முடிக்க அறிவுறுத்தல்


ADDED : டிச 10, 2025 09:04 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், உலகத் திறனாய்வு தேர்வு வாயிலாக மாணவர்களை தேர்வு செய்யும் பணியை, 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விளையாட்டு திறன்களை கண்டறியும் பொருட்டு, 'பாட்டரி டெஸ்ட்' எனும் உலகத் திறனாய்வு தேர்வு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதில், மாணவர்களின் உயரம், உடல் எடை, வேகம், நிலைப்புத் தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகியவற்றின் கீழ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100, 200, 800, மற்றும் 1,500 மீ., ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதற்காக, பள்ளிகளில் பதிவேடும் பராமரிக்கப்படுகிறது. இருப்பினும், பல பள்ளிகளில் அதற்கான பணி, மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், வரும், 31ம் தேதிக்குள், 'பாட்டரி டெஸ்ட்' பணிகளை முடிக்க, உடல்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளளனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:

வழக்கமாக, பள்ளி அளவில் 'பாட்டரி டெஸ்ட்' நடத்தி முடித்தால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்து விளங்கும் தலா, 4 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, மாவட்ட அளவில் போட்டி நடத்தி, முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

தொடர்ந்து, மண்டல போட்டி நடத்தி, ஒவ்வொரு போட்டியிலும் தலா, 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம், 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு விளையாட்டு விடுதிகளில் சேர முன்னுரிமையும் அளிக்கப்படும்.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் மாவட்ட, மண்டல போட்டிகள் நடத்தப்படவில்லை. அதனால், பல பள்ளிகளில் 'பாட்டரி டெஸ்ட்' பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us