sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்

/

 இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்

 இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்

 இ-பைலிங் நடைமுறை சிக்கலை களைய வக்கீல்கள் உண்ணாவிரதம்


ADDED : டிச 10, 2025 09:03 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: இ-பைலிங் முறைக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நேரடியாக மனுக்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யாமல், 'இ-பைலிங்' முறையில், மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இங்கு அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதற்குரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, கடந்த, 2ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை வக்கீல்கள், கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருந்தனர்.

நேற்று, இ-பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.வக்கீல் சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார், துணை தலைவர் பிரபு, இணை செயலாளர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

இதில், இ-பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us