sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

544 மனுக்கள்; 71க்கு உடனடியாக தீர்வு

/

544 மனுக்கள்; 71க்கு உடனடியாக தீர்வு

544 மனுக்கள்; 71க்கு உடனடியாக தீர்வு

544 மனுக்கள்; 71க்கு உடனடியாக தீர்வு


ADDED : செப் 28, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு திட்டத்தில், கோவையில் நேற்று நடத்திய முதல் முகாமில், 544 மனுக்கள் பெறப்பட்டன. உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டதில், 71 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சியின் சேவையை மக்களைத் தேடிச் சென்று அளிக்கும் வகையில், முதல்கட்டமாக, கிழக்கு மண்டலம், 53வது வார்டில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்கிற சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.

துணை மேயர் வெற்றிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் துறை தலைவர்கள் அனைவரும் முகாமிட்டனர்.

கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். சொத்து வரி புத்தகம், பிறப்பு சான்றிதழ் கோருதல், வரைபட அனுமதி, டி.எஸ்.எல்.ஆர்., நகல் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மொத்தம், 544 மனுக்கள் பெறப்பட்டன.

71 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவு நகல்களை, விண்ணப்பதாரர்களிடம் கமிஷனர் வழங்கினார். மீதமுள்ள, 473 மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு காண, மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us