/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிமைப்பணி தேர்வில் 62 சதவீதம் பேர் பங்கேற்பு
/
குடிமைப்பணி தேர்வில் 62 சதவீதம் பேர் பங்கேற்பு
ADDED : செப் 01, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மற்றும் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, நேற்று கோவையின், 10 மையங்களில் நடந்தது.
3,106 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒவ் வொரு தேர்வு மையத்துக்கும், ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 10 வருவாய் துறை ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
காலை 9.30 முதல், மதியம் 12.30 மணி வரை நடந்த தேர்வை, 1,927 பேர் எழுதினர். அதாவது, 62.04 சதவீதம் பேர் பங்கேற்றனர். 1,179 பேர் எழுதவில்லை.