sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நெஞ்சு வலி ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆம்புலன்சை அழைத்தவர்கள் 6,276 பேர்

/

நெஞ்சு வலி ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆம்புலன்சை அழைத்தவர்கள் 6,276 பேர்

நெஞ்சு வலி ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆம்புலன்சை அழைத்தவர்கள் 6,276 பேர்

நெஞ்சு வலி ஏற்பட்டு கடந்த ஆண்டு ஆம்புலன்சை அழைத்தவர்கள் 6,276 பேர்


ADDED : பிப் 01, 2025 02:05 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கடந்த ஒரு ஆண்டில், 87,645 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

கோவையில் அதிநவீன உயிர்க்காக்கும் வசதியுடன், 11 ஆம்புலன்ஸ்கள், அடிப்படை உயிர்க்காக்கும் வசதியுடன் 48 ஆம்புலன்ஸ்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு 2 ஆம்புலன்ஸ்கள் என 61,108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தவிர, நான்கு பைக் ஆம்புலன்ஸ்களும் உள்ளன.

இவை, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்து, அவசர தேவை நேரங்களில் உடனடியாக, களத்திற்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஊழியர்களுக்கு, முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கியவர்கள் 23,098 பேர், தற்கொலைக்கு முயன்ற 687 பேர், பிரசவம் தொடர்பாக 12,552 பேர், நெஞ்சு வலி 6,276 பேர், வயிற்று வலி ஏற்பட்டு 7,466 பேர் உள்ளிட்ட 87,645 பேர், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக சென்னை, திருவள்ளூரை அடுத்து, கோவை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.






      Dinamalar
      Follow us