sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனநிலை பாதித்தவர் கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

/

மனநிலை பாதித்தவர் கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

மனநிலை பாதித்தவர் கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

மனநிலை பாதித்தவர் கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை


ADDED : பிப் 12, 2024 11:07 PM

Google News

ADDED : பிப் 12, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காட்டில், மனநிலை பாதித்தவரை தாக்கிக் கொலை செய்த வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பெருவெம்பை சேர்ந்தவர் ராஜேந்திரன், 34. மனநிலை பாதித்த இவர் மருத்துவரின் அறிவுரையின்படி நீண்ட காலமாக மாத்திரை உட்கொண்டு வந்தார்.

இந்நிலையில், ஓலை மேய்ந்த டீக்கடையை தீவைத்து எரித்ததாக குற்றம்சாட்டி, 2010 பிப்., 18ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த விஜயன், 53, குஞ்சப்பன், 64, பாபு, 50, முருகன், 44, முத்து, 74, ரமணன், 45, முரளீதரன், 40, ராதாகிருஷ்ணன், 61, ஆகிய எட்டு பேர் ஒன்று கூடி, ராஜேந்திரனை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, புதுநகரம் போலீசார், எட்டு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

குற்றப்பத்திரிகை சமர்ப்பித்த இவ்வழக்கு, நேற்று பாலக்காடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி விநாயகர் ராவ், எட்டு பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கீலாக ரவிகுமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us