sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீக்காய சிகிச்சை

/

அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீக்காய சிகிச்சை

அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீக்காய சிகிச்சை

அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு தீக்காய சிகிச்சை


ADDED : அக் 21, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீக்காயம் காரணமாக, 8 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், ஆறு பேர் குழந்தைகள்.

தீபாவளி தினத்தன்று காலை 9:30, மாலை 6:30 மற்றும் 21ம் தேதி காலை, 10:00 மணி என்று நேரம் வாரியாக தீ விபத்துக்காக சிகிச்சை எடுத்தவர்கள் விவரம், மாநில அளவில் தொகுக்கப்பட்டது.

டீன் கீதாஞ்சலி கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில், 20 படுக்கை வசதியுடன் பிரத்யேக வார்டு, தீக்காயங்கள் சார்ந்த பெரிய விபத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டது. சிறிய காயத்துடன் வந்தவர்கள், அந்தந்த வார்டுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீபாவளி காலை முதல் இன்று (நேற்று) மதியம் வரைஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் பட்டாசு காயத்துக்கு சிகிச்சை பெற்றனர்.

இதில், மூன்று குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள ஐந்து பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

மூன்று குழந்தைகளில் ஒரு 10 வயது பெண் குழந்தை, 10 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டது. பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கண் சிகிச்சை பிரிவில், உள் நோயாளிகளானகுழந்தைகள் மூவர், பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us