/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணையில் 86 மி.மீ., மழை பதிவு
/
சிறுவாணி அணையில் 86 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜூலை 27, 2025 11:18 PM
கோவை; கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்துவருகிறது. இதனால், 50 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி சிறுவாணி அடிவாரத்தில், 53 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 86 மி.மீ., மழையும் பதிவாகியது.
அணையில் நீர்க்கசிவு இருப்பதால், 44.61 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க கேரள அரசு அனுமதித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 42.67 அடிக்கு தண்ணீர் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.5 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

