sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளத்தில் சாய்ந்த பஸ்; மக்கள் 'திக்திக்' பயணம்

/

பள்ளத்தில் சாய்ந்த பஸ்; மக்கள் 'திக்திக்' பயணம்

பள்ளத்தில் சாய்ந்த பஸ்; மக்கள் 'திக்திக்' பயணம்

பள்ளத்தில் சாய்ந்த பஸ்; மக்கள் 'திக்திக்' பயணம்


ADDED : அக் 23, 2024 12:19 AM

Google News

ADDED : அக் 23, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: பொள்ளாச்சியில் இருந்து, கிணத்துக்கடவு சென்றாம்பாளையம் வழித்தடத்தில் (25 ஏ/பி) அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த அரசு பஸ் நேற்று முன்தினம், சென்றாம்பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி பயணியருடன் சென்றது. அப்போது, ரோட்டில் எதிர் திசையில் வாகனங்கள் சென்றுள்ளன. அந்த வாகனங்களுக்கு வழி விட, ரோட்டின் ஓரமாக பஸ் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சாய்ந்தது.

பஸ்சில் பயணம் செய்த பயணியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கிரேன் உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.

பயணியர் கூறுகையில், 'சென்றாம்பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு வரை உள்ள ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டில் எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது கவனத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சில நேரத்தில், கனரக வாகனங்கள் எதிரே வரும் போது, பைக் ஓட்டி செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பஸ் பயணியர் நலன் கருதி இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us