sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு

/

 கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு

 கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு

 கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு


ADDED : நவ 13, 2025 11:56 PM

Google News

ADDED : நவ 13, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிவானந்தா காலனியில் கம்யூ., கட்சியினர் நடத்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக பழநி யிலிருந்து கட்சியினர் கோவை வந்திருந்தனர்.

அந்த பஸ் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பஸ்ஸின் மேலே அமர்ந்திருந்த குரங்கு தாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தஞ்சமடைந்தது.

அங்குள்ள உணவகங்களில் சாப்பிட வந்த மக்களிடம் உணவை பிடுங்கி சுவைத்தது, விற்பனைக்கு வைத்திருந்த வடை, பஜ்ஜி, போண்டாக்களை எடுத்து தின்றது.

உணவுக்கடை நடத்துவோர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதிக்கு தகவல் தெரிவித்தனர். சில மணி நேரங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனுள் பழ வகைகளை வைத்தனர். ஆனால் குரங்கு கூண்டில் இனியும் அகப்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து குரங்கை கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us