/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
ADDED : செப் 29, 2024 06:42 AM
குன்னுார், : குன்னுார் கேத்தி அருகே அரக்காடு கிராமத்தில், தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி அருகே அரக்காடு கிராமத்தில் சதாசிவம் என்பவர் காளான் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவரின் தோட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தோஷன் ராஜ் என்பவர் தனது மனைவியுடன் கடந்த, 3 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அவர்களது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று, பணி செய்யும் இடத்தில் அமர வைத்துள்ளனர்.
மதியம் குழந்தைகள் விளையாடிய போது, ஒன்றரை வயதுடைய மான்வி என்ற குழந்தை அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
இதனை அறிந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.