sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விழா!

/

 டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விழா!

 டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விழா!

 டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விழா!


ADDED : நவ 26, 2025 07:07 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26, அன்று அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1949, நவ., 26 ல், இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது. அதன் பிறகு அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26, முதல் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தை தான், ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கொண்டதற்கு பிறகு, அதை நடைமுறைப்படுத்தவும், சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்கவும் இரண்டு மாதம் எடுத்து கொள்ளப்பட்டது.

1950 ஜன., 24 அன்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு இந்தியாவின் சட்டமாக மாறின. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தவும், பிரதமர் மோடி, தலைமையிலான மத்திய அரசு, 2015, நவ., 26 ல், சட்ட தினம் கொண்டாட உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் 125 ம் ஆண்டு பிறந்த நாள் விழா, 2015 ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட போது, ஆண்டு தோறும் சட்ட தின விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியலமைப்பின் மதிப்பை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும், அம்பேத்கரின் லட்சியம், சிந்தனைகளை மக்களிடையே பரப்பவும், இந்திய அரசியலமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு சட்ட தினம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு பள்ளி,கல்லுாரிகளில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை மாணவர்கள் வாசிக்க செய்தல், வினாடி-வினா,கட்டுரை போட்டி, மாதிரி பாராளுமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.






      Dinamalar
      Follow us