sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டம்

/

சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டம்

சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டம்

சாலையை கடந்த காட்டு யானைகள் கூட்டம்


ADDED : ஜூலை 20, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 5 குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோத்தகிரி சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சாலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பாதையில், அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதில் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, மான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் சாலைக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி அருகே 5 குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினர். யானைகள் சாலையை கடந்து சென்ற பின்னர் வாகனங்களை அவர்கள் இயக்கினர்.

காட்டு யானைகள் குட்டியுடன் நடமாடுவதால், வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.--






      Dinamalar
      Follow us