sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாய், பூனையை 'கவ்விய' சிறுத்தை; அட்டுக்கல்லில் மூன்று மாதங்களாக 'தண்ணி குடிக்கிறது' வனத்துறை

/

நாய், பூனையை 'கவ்விய' சிறுத்தை; அட்டுக்கல்லில் மூன்று மாதங்களாக 'தண்ணி குடிக்கிறது' வனத்துறை

நாய், பூனையை 'கவ்விய' சிறுத்தை; அட்டுக்கல்லில் மூன்று மாதங்களாக 'தண்ணி குடிக்கிறது' வனத்துறை

நாய், பூனையை 'கவ்விய' சிறுத்தை; அட்டுக்கல்லில் மூன்று மாதங்களாக 'தண்ணி குடிக்கிறது' வனத்துறை


ADDED : அக் 29, 2024 09:14 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர், : அட்டுக்கல்லில், 3 மாதங்களுக்கு பின், மீண்டும் சிறுத்தை புகுந்து, நாய், பூனையை கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், கடந்த, ஆக., மாதம், தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட பசுங்கன்றை, சிறுத்தை கடித்துக் கொன்றது. அதன்பின், தொடர்ந்து, அப்பகுதியில், ஆடு, நாய், பூனை, கோழி போன்றவைகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.

இதனையடுத்து, வனத்துறையினர், கேமரா பொருத்தியும், கூண்டுகள் வைத்தும், சிறுத்தியை பிடிக்க முயன்றனர். ஆனால், சிறுத்தை சிக்காததால், அம்முயற்சி தோல்வியடைந்தது. அதன்பின், ஓணாப்பாளையம், ஆனைமடுவு பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட குப்பேபாளையம், புள்ளாகவுண்டன்புதூர், வளையங்குட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கடந்த ஒரு மாதமாக, ஆடு, நாய்களை சிறுத்தை கொன்று வருகிறது.

நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அட்டுக்கல் மலை கிராமத்தின் முன்பு உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், சிறுத்தை புகுந்து, வீட்டின் வாசலில் இருந்த ஒரு நாய் மற்றும் 3 பூனைகளை கடித்து கொன்று, புதருக்குள் தூக்கிச் சென்று மறைந்தது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்ததை உறுதி செய்தனர். சிறுத்தையை கண்காணிக்க அப்பகுதியில் கேமரா பொருத்தவும், விரைவில் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.

தவிர்க்கணும் 'ஜவ்வு ஆக்ஷன்'

கடந்த மூன்று மாதங்களாக, அட்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலேயே சிறுத்தை நடமாடி வருவதோடு, ஆடு, நாய், கோழி, பூனை போன்றவற்றை வேட்டையாடியும் வருகிறது. ஆனால், வனத்துறையினர் ஏற்கனவே வைத்துள்ளகேமராக்களிலும், கூண்டுகளிலும் சிக்காமல், சிறுத்தை தொடர்ந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன், கூடுதல் இடங்களில், கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us