sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மாவட்டத்தில் 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம்

/

கோவை மாவட்டத்தில் 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கோவை மாவட்டத்தில் 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கோவை மாவட்டத்தில் 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம்


ADDED : ஜூலை 16, 2025 10:46 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பள்ளி கல்வித் துறை சார்பில், கோவை மாவட்ட 'அ' குறுமைய விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. தேவாங்கா பள்ளியில் சிலம்பம் போட்டியும், சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி, லாரல் பள்ளி, சி.எஸ்.ஐ., பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் செஸ் போட்டியும் நடக்கின்றன.

இரு நாட்கள் நடக்கும் போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், போட்டிகளை துவக்கி வைத்தார். தேவாங்க பள்ளியில் நேற்று, 17 வயதுக்குட்பட்ட, 30 கிலோ எடைக்கும் குறைவான மாணவியருக்கான சிலம்பம் போட்டி நடந்தது.

இதில், மாரண்ண கவுடர் பள்ளி மாணவி மது வர்ஷினி, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவி பிரகதீஷ்வரி ஆகியோர், முதல் இரு இடங்களையும், 35 கிலோவுக்கு குறைவான போட்டியில் பிரசன்டேஷன் மாணவி மதுஸ்ரீ, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளி மாணவி தனலட்சுமி, ஆர்.எஸ். புரம் மாதிரி பள்ளி மாணவி நிஷிகா ஆகியோர், முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்.

அதேபோல், 40 கிலோவுக்கு குறைவான பிரிவில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி ஜெயலட்சுமி, ஆர்.எஸ்.புரம், மாதிரி பள்ளி மாணவி தக்ஷன்யா, பிரசன்டேஷன் பள்ளி மாணவி மேதா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தவிர, 50 கிலோவுக்கு குறைவான போட்டியில், சி.சி.எம்.ஏ., பள்ளி மாணவி அபிநயா, பிரசன்டேஷன் பள்ளி மாணவி மித்ரா, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி மாதிரி பள்ளி மாணவி கீர்த்தனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us