sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி

/

சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி

சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி

சுவர் இடிந்து விழுந்து ஒரு வயது குழந்தை பலி


ADDED : அக் 09, 2024 12:09 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பெகுகுல் ஷேக், 20. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோவை வந்தார். கோவையில் ஒண்டிப்புதுார் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தங்கி, அவரது மாட்டுப் பண்ணையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 4ம் தேதி இவரது ஒரு வயது குழந்தை பாத்திமாவும், பண்ணை உரிமையாளர் ராஜேஷ்குமாரின், 2 வயது குழந்தையும் வீட்டின் அருகே உள்ள, பழமையான மதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சுவர் இடிந்து குழந்தைகள் மீது விழுந்தது.

அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயம் அடைந்திருந்த பாத்திமாவுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us