sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கல்லறைத் தோட்டத்துக்கு பொதுப்பாதை தேவை; மாநகராட்சியில் கிறிஸ்தவ சபையினர் முறையீடு

/

கல்லறைத் தோட்டத்துக்கு பொதுப்பாதை தேவை; மாநகராட்சியில் கிறிஸ்தவ சபையினர் முறையீடு

கல்லறைத் தோட்டத்துக்கு பொதுப்பாதை தேவை; மாநகராட்சியில் கிறிஸ்தவ சபையினர் முறையீடு

கல்லறைத் தோட்டத்துக்கு பொதுப்பாதை தேவை; மாநகராட்சியில் கிறிஸ்தவ சபையினர் முறையீடு


ADDED : ஜன 28, 2025 11:56 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், மனுக்கள் பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.

மாநகராட்சி, 15வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி தலைமையில், ஐக்கிய கிறிஸ்தவ கல்லறைத் தோட்ட கமிட்டியினர், மேயரை சந்தித்து, 15வது வார்டு மற்றும், 17வது வார்டு எல்லைப் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு செல்ல, பொதுவழித்தடமாக அனுமதிக்கக் கோரி மனு கொடுத்தனர்.

கல்லறைத் தோட்ட கமிட்டியினர் கூறியதாவது:

ஜி.என்.மில்ஸ் புனித ஜான் போஸ்கோ சர்ச், லாலி ரோடு புனித அருளானந்தர் சர்ச், கவுண்டம்பாளையம் புனித ஜோசப் சர்ச், சாயிபாபா காலனி புனித சிறுமலர் சர்ச், இடையர்பாளையம் குழந்தையேசு சர்ச், பூ மார்க்கெட் புனித ஜோசப் சர்ச், ஜி.என்.மில்ஸ் மாரநாதா புல் காஸ்பல் சர்ச், காந்திபுரம் லேமேன் எவாஞ்சிலிகல் பெல்லோசிப் ஆகிய கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர், 20 ஆண்டுகளாக கல்லறைத் தோட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

கல்லறைத் தோட்டத்துக்கும், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கும், இந்துக்கள் மயானத்துக்கும் இடையே, 20 அடி பாதை உள்ளது. எட்டு கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த குடும்பத்தினர், வழிபாடு மற்றும் இறந்தோர் நல்லடத்துக்கு செல்வதற்கு பயன்படுத்துகின்றனர்.

கல்லறை தோட்டத்துக்கு அருகாமையில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அசோக் நகர், முல்லை நகர், சுப்ரமணியம்பாளையம் பகுதி மக்கள், தொழில் நிமித்தமாகவும் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கம்பி வேலி அமைத்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. 20 அடி ரோட்டை பொதுப்பாதையாக அனுமதித்தால், கிறிஸ்தவ மக்களுக்கும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமெனில், செலுத்த தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us