sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவருக்கு அரிவாள் வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை

/

மாணவருக்கு அரிவாள் வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை

மாணவருக்கு அரிவாள் வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை

மாணவருக்கு அரிவாள் வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை


ADDED : அக் 01, 2024 11:54 PM

Google News

ADDED : அக் 01, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம் : கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டிய, ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பாளையம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் அருப்புக்கோட்டை சேர்ந்த சிவ சவின்,20 என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் கரட்டுமேட்டில் வசித்து வரும் தனியார் கலை கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இதில் ஹரிபிரசாத்தின் நண்பர் வெற்றி என்பவர் மீது மொபைல் திருட்டு வழக்கு உள்ளது.

இந்நிலையில் வெற்றி, ஹரி பிரசாத் மற்றும் ஐந்து பேர் நேற்று முன்தினம் சிவ சவினை வாகனத்தில் கடத்திச் சென்று, தென்னை மட்டையால் அடித்து அரிவாளால் காலில் வெட்டி உள்ளனர். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

சிவ சவின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிபிரசாத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெற்றி உள்பட மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us