/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்ணையும், மனதையும் காக்க இன்று நடக்கிறது கருத்தரங்கு!
/
கண்ணையும், மனதையும் காக்க இன்று நடக்கிறது கருத்தரங்கு!
கண்ணையும், மனதையும் காக்க இன்று நடக்கிறது கருத்தரங்கு!
கண்ணையும், மனதையும் காக்க இன்று நடக்கிறது கருத்தரங்கு!
ADDED : செப் 29, 2024 01:34 AM
கோவை: 'இவ, எப்ப பார்த்தாலும் போனும், கையுமாவே திரியுறா...சரியா துாங்கறது இல்ல...சரியா சாப்பிடறது இல்ல...கண்ணு வலின்னு இப்ப படிக்கறதுக்கும் கஷ்டப்படறா...ஆனா போனை தொடாதேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறா...'
- சமீபகாலமாக இது போன்ற புகார்களுடன், மருத்துவர்களை அணுகும் பெற்றோர் அதிகரித்து வருகின்றனர். இவர்களைப்போன்ற பெற்றோருக்கு உதவும் நோக்கத்துடன், தினமலர் நாளிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, 'காக்க... காக்க கண், மனநலம் காக்க' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கத்தை, இன்று நடத்துகிறது.
கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்தில் காலை, 10:30 முதல், 12:30 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில், பெற்றோர் தனியாகவோ, தங்கள் பிள்ளைகளுடனோ இலவசமாக பங்கேற்கலாம்.
இதில், 'தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி' என்பது குறித்து, மூத்த மனநல மருத்துவர் மோனி, 'மொபைல் போன் பாதிப்பில் இருந்து, கண்களை காப்பது எப்படி' என்பது குறித்து, டிரினிட்டி மருத்துவமனை கண் டாக்டர் அனுஷா ராஜ்குமார், 'உடல் சோர்விலிருந்து காப்பது எப்படி' என்பது குறித்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருணாதேவி, 'தனித்திறன்களை வளர்த்து, படிப்பில் சாதிப்பது எப்படி' என்பது குறித்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உளவியல் ஆலோசகர் பார்வதி வைத்தியநாதன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
கருத்தரங்கு குறித்து முழு விபரம் அறிய, 88702 60003 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.