sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'

/

ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'

ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'

ஒற்றை யானை 'பிளிறல்' ஊரெல்லாம் 'அலறல்'


ADDED : பிப் 08, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 08, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர், - இரண்டு வாரங்களாக விவசாய பயிர்களை ஒற்றை யானை துவம்சம் செய்வதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது நல்லுார் வயல், சப்பாணி மடை கிராமங்கள். இங்கு இரண்டு வாரங்களாக அடிக்கடி ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில், மணிகண்டன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களை அடியோடு சாய்ந்தது.

தங்கமணி என்பவரின் கரும்பு தோட்டத்தையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் பல மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினர்.

விவசாயி மணிகண்டன் கூறுகையில், ''எங்கள் கிராமங்களுக்குள் யானைகள் அடிக்கடி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதே.

வனத்துறை மற்றும் வருவாய் துறை ஆய்வு செய்து யானை வழித்தடங்களை மீட்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். எங்கள் மொத்த உழைப்பையும் ஒரு நொடியில் யானைகள் வேரோடு சாய்த்து விடுகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடும் தருவதில்லை. சிறு குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us