sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வானுயர்ந்த கொடிகம்பம்

/

வானுயர்ந்த கொடிகம்பம்

வானுயர்ந்த கொடிகம்பம்

வானுயர்ந்த கொடிகம்பம்


ADDED : டிச 11, 2024 09:52 PM

Google News

ADDED : டிச 11, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலையில் காவல் தெய்வமாக வீற்று இருக்கும் மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொடிக்கம்பம் கொண்டு வருவது வழக்கமாக உள்ளது.

இதற்காக முறைதாரர்கள், மாசாணி அம்மன் கோவில் நற்பணி மன்றம், மற்றும் பக்தர்கள் சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று உயரமான மூங்கில் மரத்தை கொண்டு வருவர்.அதன்பின், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.

அங்கு இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை பக்தர்கள் தோலில் சுமந்தபடியேஊர்வலமாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வருவர். மறுநாள் ஆழியாறு ஆற்றுப்படுகையில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெறும்.கோவிலின் நான்கு புறமும் கயிறு கட்டி கம்பம் நிலை நிறுத்தப்படும். ராஜகோபுரம் முன்பாக நிலை நிறுத்தப்படும் கம்பத்துக்கு, பக்தர்கள் வழிபாடு செய்வர்.






      Dinamalar
      Follow us