sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

/

ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம்;  38 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு: பொள்ளாச்சி கோர்ட் நடவடிக்கை

1


ADDED : ஏப் 17, 2025 07:26 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்டு, 38 ஆண்டுகளாக நீதிமன்ற பொறுப்பில் இருந்த ஒரு சவரன் தாலி மற்றும் 10 ரூபாய் பணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போளிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. மனைவி அருக்காணி மற்றும் மூன்று வயதுள்ள இரட்டை குழந்தைகளை, கடந்த, 1987ம் ஆண்டு முத்துச்சாமி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அருக்காணியின் ஒரு சவரன் தாலி, 10 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், கோர்ட்டில் ஒப்படைத்தனர். போலீசார், முத்துச்சாமியை கைது செய்யாததால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. பொள்ளாச்சி ஜே.எம்.,2 கோர்ட் மாஜிஸ்திரேட் பிரகாசம், கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட தாலி மற்றும், 10 ரூபாய் நோட்டை, இறந்தவரின் உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த, ஒரு மாதமாக அருக்காணியின் உறவினர் எங்கே உள்ளனர் என தேடி, வெள்ளாளபாளையத்தில் வசிக்கும் அவரது அக்கா முத்தம்மாள்,82, என்பவரை கண்டுபிடித்தனர். அவரிடம், நேற்று 10 ரூபாய் நோட்டு, ஒரு சவரன் தாலி ஒப் படைக்கப்பட்டது.

இது குறித்து வக்கீல்கள் கூறுகையில், 'கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், 38 ஆண்டுகளுக்கு பின் அருக்காணியின் உறவினரை தேடி, நகை, பணம் ஒப்படைக்கப்பட்டது,' என்றனர்.

முத்தம்மாள் கூறுகையில், ''பல ஆண்டுக்கு முன், எனது தங்கையையும், இரு குழந்தையையும் கொன்று விட்டார். கோர்ட்டில் இருந்த தங்கையின் தாலியை பெற்றுக்கொள்ளுமாறு சொன்னாங்க; அவற்றை பெற்றுக்கொண்டேன்,'' என்றார்.

கடந்த, 38 ஆண்டுகளாக கோர்ட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு சவரன் தாலி, 10 ரூபாய் பணம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us