sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூதாட்டியை தாக்கிய காட்டு யானை

/

மூதாட்டியை தாக்கிய காட்டு யானை

மூதாட்டியை தாக்கிய காட்டு யானை

மூதாட்டியை தாக்கிய காட்டு யானை


ADDED : மார் 15, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்;மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட, தீத்திபாளையம், கரடிமடை, குப்பனுார், பெருமாள் கோவில்பதி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, கரடிமடை மாரியம்மன் கோவில் அருகே உள்ள தோட்டத்து வீட்டின் வாசலில், நாகம்மாள்,70 என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த நாகம்மாளை தாக்கி, தூக்கி வீசியது.

இதில், நாகம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது, நாகம்மாள் கணேசா காப்பாத்து என, கூறி சப்தமிட்டுள்ளார். அதன்பின், ஒற்றை காட்டு யானை, அங்கிருந்து நகர்ந்து, அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.






      Dinamalar
      Follow us