sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை

/

உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை

உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை

உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை


ADDED : டிச 23, 2024 04:09 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வடகோவை சிந்தாமணி 'ரவுண்டானா'வில், வாகன ஓட்டிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 'உலக உருண்டையை தாங்கும் மர மனிதன்' சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரேஸ்கோர்ஸ், சுங்கம் ரவுண்டானா, ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலைத்தீவு திடல்கள் மேம்படுத்தப்பட்டன. மேலும் 15 இடங்களில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதில், வடகோவை சிந்தாமணி பகுதியில், தானியங்கி சிக்னல் முறை அகற்றப்பட்டு, மாநகராட்சியால் 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது, அதில், 'உலக உருண்டையை தாங்கும் மர மனிதன்' சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

புவி வெப்பமயமாதலை தவிர்க்க மரங்கள் நட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மர மனிதன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள 'ரவுண்டானா'வில், 'ஏர் உழும் விவசாயி' சிலை நிறுவும் பணி நடந்து வருகிறது.

அடுத்த கட்டமாக, சுங்கம் செல்லும் ரோட்டில் உள்ள ரவுண்டானா, லாலி ரோடு ரவுண்டானா, கலெக்டர் அலுவலகம் எதிரே மற்றும் விளாங்குறிச்சி ரோட்டில் சாலைத்தீவு திடல்கள் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us