ADDED : ஜூலை 27, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ராகுல் உதயா, 36. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஓட்டலில், அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையில் இருந்து, படிக்கட்டில் இறங்கி வெளியே வந்தபோது, படிக்கட்டில் தவறி விழுந்து மயங்கினார்.
அருகிலிருந்தவர்கள் அவரை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.