/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணியின் போது விபத்து: மூதாட்டிக்கு மாதம் தோறும் உதவித்தொகை
/
பணியின் போது விபத்து: மூதாட்டிக்கு மாதம் தோறும் உதவித்தொகை
பணியின் போது விபத்து: மூதாட்டிக்கு மாதம் தோறும் உதவித்தொகை
பணியின் போது விபத்து: மூதாட்டிக்கு மாதம் தோறும் உதவித்தொகை
ADDED : டிச 18, 2024 08:44 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 61 வயது மூதாட்டி ஒருவருக்கு விரல் துண்டானதால், அவருக்கு இ.எஸ்.ஐ. காப்பீடு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவதற்கான அனுமதி மற்றும் முதல் கட்ட உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிசிலி அந்தோணிசாமி, 61 என்ற பெண் பணி புரிந்து வந்தார். இவர் பராமரிப்புப் பிரிவில் பணி புரிந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, 2023ம் ஆண்டு, இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக வலது கை சுண்டு விரல் நகங்கி காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருந்துவமளையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விரல் துண்டிக்கப்பட்டது.
பணியின் போது விபத்து நடந்ததாலும், அவர் இ.எஸ்.ஐ. காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து இருந்ததாலும், தொழிலாளர் அரசு காப்பிட்டுக் கழகம்- சார் மண்டல அலுவலகம் கோவை, சார்பில் அவரது சம்பளத்தில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் நிரந்தர ஊனமுற்றோர் பலன் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிசிலி அந்தோனிசாமிக்கு வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன், சார் மண்டல அலுவலகம் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும்.
மேட்டுப்பாளையம் கிளை அலுவலகத்தின் கிளை மேலாளர் ஸ்ரீராஜ்சிவசங்கர், காசாளர் பிரியங்கா ஆகியோர் இ.எஸ்.ஐ. கிளை அலுவலகத்தில் நிரந்தர ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான அனுமதி உத்தரவு மற்றும் முதல் கட்ட உதவி தொகையை, நேற்று வழங்கினர்.

