ADDED : மார் 02, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
சூலுார்: சூலுார் அடுத்த நடுப்பாளையம், மரியம்ரோஸ் கார்டனை சேர்ந்த தம்பதி ஆரோக்கியதாஸ்- -- மேரி பெனிட்டா. இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை ஜோஸ்லின்.
நேற்று முன்தினம் இரவு, ஆரோக்கியதாஸ் சகோதரர் ஆண்ட்ரூ அருள்தாஸ் உள்ளிட்ட குடும்பத்தினர், வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
ஆண்ட்ரூ காரை பின்னோக்கி இயக்கினார். அப்போது கார் மோதி குழந்தை இறந்தது. சூலுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
