sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு

/

100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு

100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு

100 பெண் குழந்தைகளுக்கு தபால் நிலையத்தில் கணக்கு


ADDED : மார் 31, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 31, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், 100 குழந்தைகளுக்கு, அறக்கட்டளை சார்பாக கணக்கு துவக்கி வைக்கப்பட்டது.

கோவையில் செயல்படும், 'நம் தேசம் நம் பெருமை' அறக்கட்டளை சார்பில், சமுதாயப் பணியின் ஒரு அங்கமாக, கடந்த மாதம், கள்ளிமடை அரசு ஆரம்பப் பள்ளியில், 21 பெண் குழந்தைகளுக்கும், இரண்டாவது கட்டமாக, வடவள்ளி அருகேயுள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், 30 பெண் குழந்தைகளுக்கும், மூன்றாவது கட்டமாக, சாய்பாபா கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள, அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் 102 பெண் குழந்தைகளுக்கும், செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ரூ.250 செலுத்தி கணக்கு துவக்கி வைத்தனர்.

குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், 'நம் தேசம் நம் பெருமை' அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் முரளிதரன், பொது செயலாளர் சாய் ஸ்ருதி, செயலாளர் வித்யா சுரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு, அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us