sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனம்; கண்டறிந்தால் நடவடிக்கை உறுதி

/

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனம்; கண்டறிந்தால் நடவடிக்கை உறுதி

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனம்; கண்டறிந்தால் நடவடிக்கை உறுதி

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனம்; கண்டறிந்தால் நடவடிக்கை உறுதி


ADDED : ஏப் 14, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு இயக்குகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது 'ஆக்டிங் டிரைவர்' வாயிலாக, கார்களை வாடகைக்கு விடுகின்றனர். இதனால், வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து, அவ்வப்போது புகார் தெரிவிக்கப்பட்டும் வருகிறது. அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான விதிமுறைகள் வேறு; வணிக பயன்பாட்டுக்கான விதிமுறைகள் வேறு. ஆனால், சிலர் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை, போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர்; வாடகைக்கு இயக்குகின்றனர்.

இதுபோன்ற, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கும் அறிவுறுத்தல் வந்துள்ளது. அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

சாலைகளில் சோதனை நடத்தும்போது விதிமீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும். வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us