/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
/
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ADDED : ஜூலை 30, 2025 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில்களில் கூடுதல் பெட்டிகளை, ரயில்வே நிர்வாகம் இணைத்துள்ளது.
கோவை - மன்னார்குடி - கோவை (16616/16615) இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களில், தலா ஒரு படுக்கை வசதி பெட்டி நாளை முதல் இணைக்கப்படுகிறது.
கோவை - திருப்பதி - கோவை(22616/22615) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு ஏ.சி., இருக்கை வசதி பெட்டி நாளை முதல் இணைக்கப்படுகிறது.
கோவை - நாகர்கோவில் - கோவை (22668/22667) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு படுக்கை வசதி பெட்டிகள் வரும், 2 மற்றும் 3ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.