sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனவிலங்குகளை விரட்ட கூடுதல் ரோந்து வாகனங்கள்

/

வனவிலங்குகளை விரட்ட கூடுதல் ரோந்து வாகனங்கள்

வனவிலங்குகளை விரட்ட கூடுதல் ரோந்து வாகனங்கள்

வனவிலங்குகளை விரட்ட கூடுதல் ரோந்து வாகனங்கள்


ADDED : ஜூலை 14, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் வனவிலங்குகளை கட்டுப்படுத்த, கூடுதல் ரோந்து வாகனங்களை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவை வடக்கு சின்னதடாகம் வட்டாரத்தில் காளையனூர், திருவள்ளுவர் நகர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், மடத்தூர், பன்னிமடை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு யானைகளின் தொடர் ஊடுருவல் காரணமாக தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைகின்றன. காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த வனத்துறையினர் ரோந்து வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர். வனவிலங்குகளின் ஊடுருவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரண்டு ரோந்து வாகனங்களில் கூடுதல் வனத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,' விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டு ரோந்து வாகனங்கள் வனவிலங்குகளை விரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயிர்களின் அழிவை வனவிலங்குகளிடமிருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us