sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்

/

ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்

ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்

ஆதிபராசக்தி கோவில் திருவிழா; பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்


ADDED : மே 02, 2025 08:38 PM

Google News

ADDED : மே 02, 2025 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை, சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலின், 19ம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்களால் அம்மனுக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலிலிருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

இன்று, 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us