/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிபராசக்தி கோவில் திருவிழா பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்
/
ஆதிபராசக்தி கோவில் திருவிழா பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்
ஆதிபராசக்தி கோவில் திருவிழா பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்
ஆதிபராசக்தி கோவில் திருவிழா பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்
ADDED : மே 04, 2025 10:07 PM

வால்பாறை, ; வால்பாறை, சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வால்பாறை நகர் சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி அம்மன் கோவிலின், 19ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நாள் தோறும் காலை, மாலையில் அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.