/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதித்யா குளோபல் பள்ளி ஆண்டு விழா
/
ஆதித்யா குளோபல் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 03, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : குரும்பபாளையத்தில் உள்ள, ஆதித்யா குளோபல் பள்ளியின், 5ம் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடந்தது. விழாவிற்கு, ஆதித்யா நிறுவனங்களின் நிறுவனர் சுகுமாரன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில், முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும், 'இளந்தளிர்' மாணவர் மின்னிதழையும் வெளியிட்டார்.
முதல்வர் விஜயபிரபா, பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தாளாளர் பிரவீன் குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

