/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதித்யா பள்ளியின் 10வது ஆண்டு விழா
/
ஆதித்யா பள்ளியின் 10வது ஆண்டு விழா
ADDED : ஜன 31, 2024 12:48 AM

கோவை;ஆதித்யா சர்வதேசப் பள்ளி மற்றும் ஹனா மழலையர் பள்ளி இணைந்து, 10வது ஆண்டு விழாவை பள்ளி வளாகத்தில் நடத்தின.
பள்ளித் தலைவர் சுகுமாரன், தாளாளர் கீர்த்தனாஸ்ரீ மற்றும் விஜய் குணசேகரன் விழாவிற்கு தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கவுமாரம் பிரசாத்தி அகாடமி தீபா கலந்து கொண்டார்.
ஆடல், பாடல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், விழா துவங்கியது. போட்டிகளில் பங்குபெற்று முதலிடம் வகித்த மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இப்பள்ளிகளின் சார்பாக சிறப்பு விருந்தினர் தீபாவிற்கு, பள்ளித் தலைவர் மற்றும் தாளாளர் இணைந்து, 'இரும்புப் பெண்மணி' என்னும் விருதினை வழங்கி கவுரவித்தனர்.
பள்ளி முதல்வர் ஆத்யா பர்வீன் பாபி, ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் கலந்துகொண்டனர்.