/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலக்கல் கோவிலில் அ.தி.மு.க.,வினர் வழிபாடு
/
சூலக்கல் கோவிலில் அ.தி.மு.க.,வினர் வழிபாடு
ADDED : ஜூலை 25, 2025 10:18 PM

பொள்ளாச்சி; 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்,' என, அக்கட்சியினர், சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து முதல்வராக வேண்டும், என, பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், கட்சியினர் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க., ஆட்சியில் அனுபவிக்கும் இன்னல்களை துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வினியோகித்தனர்.
நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.