/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசநோய் கண்டறியும் பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் தவிர்க்க அறிவுறுத்தல்
/
காசநோய் கண்டறியும் பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் தவிர்க்க அறிவுறுத்தல்
காசநோய் கண்டறியும் பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் தவிர்க்க அறிவுறுத்தல்
காசநோய் கண்டறியும் பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2025 08:44 PM
கோவை; அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் அனைத்திலும் காசநோய் பரிசோதனைக்கு, மைக்ரோஸ்கோப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள் ளன.
காசநோய் பாதிப்பு முன்கூட்டியே கண்டறிந்தால், அதன் தன்மைக்கு ஏற்ப, ஆறு மாதம், ஒன்பது மற்றும் 12 மாதம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு வாரங்கள் இருமல், சளியில் ரத்தம் வருதல், இருமும் போது நெஞ்சு வலி, எடை குறைதல், பசியின்மை, மாலை நேர காய்ச்சல் இதன் அறிகுறிகள்.
கோவை மாவட்டத்தில் காசநோய் பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், தனியார் மையங்களில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு, மைக்ரோஸ்கோப் பயன்படுத்துவதால், துல்லியமான முடிவுகள் கிடைப்பது இல்லை. ஆகவே தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

