/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் விலை ரூ.1 உயர்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
/
இளநீர் விலை ரூ.1 உயர்வு; விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மார் 30, 2025 10:47 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,000 ரூபாய். தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதன் காரணமாக இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
அதேநேரம், இளநீர் வரத்து மிகவும் குறைந்தே காணப்படுகிறது. எனவே, இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும், விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.