sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை

/

எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை

எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை

எண்ணெய் பண்டங்கள் குறைக்க பெற்றோருக்கு அறிவுரை


ADDED : ஆக 27, 2025 10:34 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுபழக்க முறையை உருவாக்கும் நோக்கில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், 'எண்ணெய் இல்லா பண்டங்கள்' என்ற தலைப்பில், வாரத்தில் இரண்டு நாட்கள் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வழங்கும்படி, பெற்றோர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர் சகுந்தலா கூறுகையில்,“எண்ணெயில் பொறித்த துரித உணவுகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'எண்ணெய் இல்லா பண்டங்கள்' என்ற தலைப்பில், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில், அவல், முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள், பச்சை காய்கறி சேலட் போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்கும்படி பெற்றோர்களிடம் கேட்டுள்ளோம்.

அதோடு, மாணவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், களிமண்ணால் அவர்கள் தயாரிக்கும் உருவங்களில் செடிவிதைகளை உள்ளே வைத்து, பந்து அல்லது பிற வடிவங்களில் செய்து, மரம் நடுவதற்கு ஊக்குவித்து வருகிறோம்,”என்றார்.

மாணவர்களிடம் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சுகர் மற்றும் ஆயில் பண்டங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை வைக்க, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அண்மையில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us