ADDED : டிச 31, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், 'தொழில்முனைவோராக உயர்வது' என்ற நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரித் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''தொழில்முனைவோராக வேண்டுமானால் நிர்வாகத்தை பற்றி படிப்பதோடு மட்டுமின்றி, தொழில்முனைவோராகி அதில் வெற்றி பெற்றவர்களின் அனுபவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்; வேலை வழங்குபவராக மாணவர்கள் மாற வேண்டும்,'' என்றார்.
ஸ்ரீ புள்ளியன்ஸ் உரிமையாளர் பலராமன், பிரபாத் ஆட்டோமோடிவ் நிறுவன நிர்வாக இயக்குனர் பாலாஜி, பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.