sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை

/

குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை

குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை

குழந்தைகளுக்கு பாதிப்பு இருந்தால் சிகிச்சை; பணியாளர்களுக்கு அறிவுரை


ADDED : பிப் 18, 2025 09:49 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; அங்கன்வாடிகளில், குழந்தைகளுக்கு, சளி, இருமல் என நோய் பாதிப்பு ஏற்பட்டால், டாக்டரை அணுகி சிகிச்சை பெற, பெற்றோர் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சளி, இருமல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில், 99 அங்கன்வாடி மையங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது, சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சளி, இருமல் காரணமாக பலரும் பாதிக்கின்றனர். அவ்வகையில், குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.பி.எஸ்.கே., சுகாதார குழுவினருக்கும் தகவல் தெரிவித்து, சிகிச்சை அளிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:

அங்கன்வாடி குழந்தைகள் மீது, தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வெயிலின் தாக்கம் இருப்பதால், நோய் பாதிப்பு ஏதும் இருக்காது. குழந்தைகளுக்கு, காய்ச்சிய குடிநீர் வழங்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us