sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

463 நாட்களுக்கு பிறகு கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது! விசைத்தறி கூட்டமைப்பினர் நிம்மதி

/

463 நாட்களுக்கு பிறகு கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது! விசைத்தறி கூட்டமைப்பினர் நிம்மதி

463 நாட்களுக்கு பிறகு கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது! விசைத்தறி கூட்டமைப்பினர் நிம்மதி

463 நாட்களுக்கு பிறகு கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது! விசைத்தறி கூட்டமைப்பினர் நிம்மதி


ADDED : ஏப் 21, 2025 08:45 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமனூர்: நீண்ட காலதாமத்துக்கு பின், கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தை விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது. இதையடுத்து விசைத்தறிகளை இயக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. 1.50 லட்சம் விசைத்தறிகளை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளர்களுடன், விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தொழிலை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக கூலி குறைப்பு, மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜன., முதல் கூட்டமைப்பினர் கூலி உயர்வு கேட்டு மனுக்களை கொடுத்து வந்தனர்.

நீண்ட காலதாமதம்


50 க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் கொடுத்தும், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் இல்லாததால், கடந்த, மார்ச், 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். ஏப்., 11 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்தும் தீர்வு கிடைக்காததால், 12 விசைத்தறியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத்தை துவக்கினர்.

சட்டசபையிலும் இப்பிரச்னை எதிரொலித்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், சோமனூர் ரகத்துக்கு, 15 சதவீதமும், இதர ரகத்துக்கு, 10 சதவீத கூலி உயர்வு வழங்குவது என, ஒப்பந்தம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்


இதையடுத்து சோமனூர் உண்ணாவிரத பந்தலில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

நிர்வாகிகள் பேசுகையில்,' பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, 463 நாட்கள் கழித்து கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்டவர்களுக்கும், தீர்வு ஏற்படுத்தி கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்,' என்றனர். தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், உண்ணாவிரதம் இருந்த விசைத்தறியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தெக்கலூர், அவிநாசி, புதுப்பாளையம், கண்ணம்பாளையம், காரணம் பேட்டை, பல்லடம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.

சட்ட பாதுகாப்பு

சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில், சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும், என்ற கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு, ஒரு மாத காலத்துக்குள், கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு சட்டபாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.








      Dinamalar
      Follow us