sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி


ADDED : அக் 22, 2025 09:53 PM

Google News

ADDED : அக் 22, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு, வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வேளாண் அறிவியல் பாடப்பிரிவில், மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து, விவசாயிகள் தோட்டத்தில் நேரடியாக பயிற்சியும், செயல் விளக்கமும் அளிக்கப்படுகிறது.

சிறுமுகையை அடுத்த சம்பரவள்ளிபுதூரில் உள்ள இயற்கை விவசாயி விசுவநாதன் தோட்டத்தில், காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள், மண்ணின் வளம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மண்புழு உரங்கள் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது குறித்து, இயற்கை விவசாயி விசுவநாதன் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வேளாண் அறிவியல் ஆசிரியை மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us