/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை வேளாண்துறை எச்சரிக்கை
/
மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை வேளாண்துறை எச்சரிக்கை
மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை வேளாண்துறை எச்சரிக்கை
மானிய யூரியாவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை வேளாண்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 03, 2025 06:13 AM
கோவை; மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 2,576 டன், டி.ஏ.பி., 873 டன், பொட்டாஷ் 2,984 டன், காம்ப்ளக்ஸ் 4,084 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1995ன்படி, குறைந்தது 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்கக் கூடாது.
மானிய விலையில் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், மானிய விலை உரங்களை பிற மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, கொள்முதல் செய்யவோ கூடாது.
அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்கக்கூடாது. அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது.
தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.