sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி

/

நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி

நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி

நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி


ADDED : ஜூலை 15, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், கொடிசியா சார்பில் நடந்து வந்த, 'அக்ரி இன்டெக்ஸ் 2025' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது.

கண்காட்சி குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வெள்ளகோவிலை சேர்ந்த விவசாயி கிட்டுசாமி கூறுகையில், ''தென்னந்தோப்புகளில் விழும் மட்டைகளை, துாள் துளாக்கி உரமாக மாற்றும் இயந்திரம் பெரிதும் உதவியாக இருக்கிறது,'' என்றார்.

சின்னத்தாராபுரம், பெரிய திருமங்கலத்தை சேர்ந்த விவசாயி சிவசண்முகம், “எங்கிருந்தாலும் மொபைல் போனில் மோட்டாரை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பங்களை நேரடியாக பார்வையிட்டு பயன்படுத்த, இந்த கண்காட்சி உதவியாக இருந்தது,” என்றார்.

சேலம் மாவட்டம், டி.பெருமாள்மலையை சேர்ந்த விவசாயி சசிகலா, ”டிராக்டருக்கு தேவையான உதிரி பாகங்களையும், உபகருவிகளையும் அறிந்து வாங்க முடிந்தது,“ என்றார்.

கோவை நரசீபுரத்தை சேர்ந்த விவசாயி ரேவதி, “விவசாயத்தை நீர்ப்பாசனம் முதல் மருந்து தெளித்தல் வரை தானியங்கி முறைக்கு மாற்ற உள்ளோம். அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் அதற்கான திட்ட செலவுகளை மதிப்பிடவும் கண்காட்சி உதவியது,'' என்றார்.






      Dinamalar
      Follow us