/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க.வினர் கலெக்டருக்கு மனு
/
அ.தி.மு.க.வினர் கலெக்டருக்கு மனு
ADDED : ஆக 14, 2025 09:22 PM
வால்பாறை; வால்பாறையில் நிலவும் மனித - வனவிலங்கு மோதலுக்கு தீர்வு காணக்கோரி, அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை ஏ.டி.பி. (அ.தி.மு.க.) தொழிற்சங்க தலைவர் அமீது, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில், வன விலங்கு - மனித மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் விளையாடக்கூட முடியாத நிலை உள்ளது. சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு போன்ற வன விலங்குகளால் உயிர்பலியாவதை தடுக்க வேண்டும்.
வனவிலங்கு - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சுற்றி உள்ள புதரை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.